Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சேலத்தில் மயான கொள்ளை: யாசகம் கேட்ட ... மஹா சிவராத்திரி தேர்த்திருவிழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அங்காளம்மன் கோவில் மயான சூறைத்திருவிழா: லட்சக்கணக்கானோர் பங்கேற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 பிப்
2018
02:02

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணத்தில் நடந்த, அங்காளம்மன் கோவில் மயான சூறைத் திருவிழாவில், ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர், சுவாமி தரிசனம் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில், மஹா சிவராத்திரியை முன்னிட்டு, அங்காளம்மன் மயான சூறைத் திருவிழா நேற்று நடந்தது. கடந்த, 12ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.

நேற்று காலை, 4:00 மணிக்கு முகவெட்டு எடுத்து, தென்பெண்ணை ஆற்றிற்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. காலை, 5:00 முதல், 9:00 மணி வரை அம்மன் சர்வ அலங்கார தரிசனம், பக்தர்கள் அலகு குத்தியும், உடல் முழுவதும் எலுமிச்சம் பழங்களை குத்திய படியும், சங்கிலி இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில், 50க்கும் மேற்பட்டவர்கள் காளி வேடமணிந்து வந்தனர். மதியம், 1:35 மணிக்கு தேர், மயான சூறைக்கு புறப்பட்டது. இதையொட்டி, அலங்கரிக்கப்பட்ட தேரில் அங்காளம்மன் ஊர்வலமாக, காவேரிப்பட்டணத்தின் முக்கிய வீதிகள் வழியாக வந்தது. தேர் அண்ணாசிலை அருகில் வந்த போது, பக்தர்கள் முதுகில் அலகு குத்திக் கொண்டு, 100 அடி தூரத்திற்கு அந்தரத்தில் தொங்கியபடி, அம்மனுக்கு மாலை அணிவித்தனர். மேலும் தீபாராதனை காட்டியும், குழந்தைகளை சுமந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து தேர் மாலை, 5:00 மணிக்கு தென்பெண்ணை பாலத்தை கடந்து, ஆற்றங்கரையை சென்றடைந்தது. தென்பெண்ணை பாலத்தில், ஏராளமான பக்தர்கள் குவிந்ததால், அவ் வழியே செல்லும் அனைத்து வாகனங்களும் தேசிய நெடுஞ்சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. விழாவில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். இன்று, காவேரிப்பட்டணம் தாம்சன் பேட்டையில் உள்ள பூங்காவனத்தமன் கோவில் மயான சூறைத்திருவிழாவை முன்னிட்டு, மதியம், 1:15 மணிக்கு தேர் புறப்படும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; இந்தாண்டு சாதுர்மாஸ்ய விரதத்தை காஞ்சி மடாதிபதிகள்; ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்,  ... மேலும்
 
temple news
காரைக்கால் ; காரைக்கால் மாங்கனித்திருவிழா முன்னிட்டு காரைக்கால் அம்மையார் பரமதத்தர் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் மலையை பக்தர்கள் சிவனாக நினைத்து வழிபட்டு ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், ஜேஷ்டாபிஷேகம் செய்து, நம்பெருமாளுக்கு தைலக்காப்பு ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஜப்பான் பக்தர்கள் புனித நீராடி, சுவாமி தரிசனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar