Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் ... ஊஞ்சல் சேவையில் அங்காள பரமேஸ்வரி
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து : தீயணைப்புத்துறை அறிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2018
12:02

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதற்கு கடைகளில் அட்டைகள், பிளாஸ்டிக் பொருட்களை குவித்து வைத்திருந்ததே காரணம்,” என தீயணைப்புத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இக்கோயிலில் கடந்த பிப்.,2ல் இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீரவசந்தராயர் மண்டபத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. தீ விபத்து குறித்து ஆய்வு செய்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய தீயணைப்புத்துறைக்கு கலெக்டர் வீரராகவராவ் உத்தரவிட்டிருந்தார்.துணை இயக்குனர் சரவணக்குமார் தலைமையில் மதுரை, தேனி, நெல்லை, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கூடுதல் தீயணைப்பு அலுவலர்கள், நிலைய அலுவலர்கள் அடங்கிய குழு வீர வசந்தராயர் மண்டபம், தீ விபத்தில் இருந்து தப்பிய பழைய திருக்கல்யாண மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், சுவாமி சன்னதி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தது.கலெக்டரிடம் அவர்கள் நேற்று தாக்கல் செய்த அறிக்கை விபரம்: கோயிலில் தீத்தடுப்பு கருவிகள் பெயரளவுக்கு மட்டுமே வைக்கப்பட்டுள்ளன. தீத்தடுப்பு நடவடிக்கையில் கோயில் நிர்வாகம், கடைக்காரர்கள் மெத்தனமாகவே இருந்துள்ளனர்.

தீப்பிடித்த பகுதி கடைகளில் அட்டைகள், பிளாஸ்டிக் பொருட்களை அதிகளவு குவித்து வைத்திருந்ததே விபத்துக்கு காரணம். கோயிலுக்கு அருகிலேயே திடீர்நகர் தீயணைப்பு நிலையம் உள்ளது. ஆனால் மேற்கு, கிழக்கு, வடக்கு கோபுர வாசல் உள்ளிட்ட முக்கிய வழித்தடங்கள் அடைக்கப்பட்டுள்ளன. கோயிலுக்கு வரும் வழித்தடங்களும் வாகனங்களை நிறுத்தியும், கடைகள் வைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் தீ விபத்து நடந்தாலும் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கூழ் படைத்து ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஆடி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகாலை ... மேலும்
 
temple news
திருப்புவனம்; ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் இன்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் ரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar