பதிவு செய்த நாள்
21
பிப்
2018
12:02
திருப்பூர்: பல்லடம் அருகே மாகாளியம்மன் கோவிலில், ‘பாலிதீன்’ இல்லாமல், பசுமை கும்பாபிஷேகமாக வித்தியாசமான முறையில் நடத்தப்பட்டுள்ளது. பல்லடம் அருகே குன்னாங்கல்பாளையத்தில், செல்வ விநாயகர் மற்றும் மாகாளியம்மன் கோவில் உள்ளது. கோவிலில், திருப் பணி செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. விழாவை, ‘பாலிதீன்’ மற்றும் குப்பை இல்லாத, பசுமை கும்பாபிஷேகமாக நடத்த, ‘ஸ்வான்’ மற்றும் ‘டிரீம்-20’ அமைப்பு சார்பில்,பொதுமக்களிடம் ஆ@லாசனை கூறப்பட்டது.
இதனால், இரண்டு நாட்கள் நடந்த யாகசாலை பூஜையில், பொருட்கள் அனைத்தும், மண் பானை, இலை, எவர்சில்வர் பாத்திரம், காகித பொருட்கள், மூங்கில் கூடைகள் ஆகி யன மட்டு@ம பயன்படுத்தப்பட்டன. பிரசாதங்கள் அனைத்தும் துணிப் பையில், வழங்கப்பட்டது. விழா விளம்பரம் மற்றும் அறிவிப்பு பலகைகள் துணி பேனர்களும் கூட, இயற்கை சாய பொருட்களால் அச்சிடப்பட்டது. விழாவில், பங்கேற்ற, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு, பாக்கு மட்டை தட்டில் உணவும், எவர்சில்வர் டம்ளரில் குடிநீரும் வழங்கப்பட்டன. பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும், பழ மரக்கன்றுகள் வழங்கப்பட் டன. 12 ஆண்டுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் என்பதை குறிக்கும் வகையில், கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், 120 மரக்கன்றுகள் நட்டு வளர்க்கும் பணி துவக்கப்பட்டது. ப”மை ஆர்வலர்கள் கூறுகையில், ‘ஆன்மீகத்தோடு, இயற்கை காக்கும் பணியில், பொதுமக்களும், தன்னார்வலர்களும் இணைந்து, ‘பாலிதீன்’ இல்லாமல் கும்பாபி ஷேக விழா நடந்தது. இதற்கு கிராம மக்களும் நல்ல ஒத்துழைப்பு கொடுத் தனர். இனி, தங்கள் வீடுகளிலும், ‘பாலிதீன்’ பைகளை பயன்படுத்த மாட்@டாம் என்று உறுதியும் எடுத்து கொண்டனர்,’ என்றனர்.