Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்பூரில் செல்வநாயகி அம்மன் ... காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்காஞ்சி மாசிமகம் கங்கைவராக நதீஸ்வரர் கோவில் திருவிழா வரும் 1ம் தேதி நடக்கிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 பிப்
2018
12:02

வில்லியனூர்: திருக்காஞ்சி மாசிமக தீர்த்தவாரி திருவிழா, வரும் 1ம் தேதி நடைபெறுகிறது.

வில்லியனூர் அருகே உள்ள திருக்காஞ்சியில், கங்கைவராக நதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் மக நட்சத்திரத்தில் உற்சவ மூர்த்தி சங்கராபரணி ஆற்றில் தீர்த்த வாரி நடைபெறும். புதுச்சேரி மற்றும் தமிழக பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவர்.

இந்தாண்டு மாசி மக தீர்த்தவாரி பிரம்மோற்சவம் கடந்த 19ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 20ம் தேதி காலை 10:30 மணி அளவில் வேத மந்திரங்கள் முழங்க கொடிஏற்ற ப்பட்டது.

அதனை தொடர்ந்து மூலவர் கங்கைவராக நதீஸ்வரர், காமாட்சி அம்மன் மற்றும் மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜையும், இரவு 8 மணிக்கு கங்கைவராக நதீஸ்வரர், இந்திர விமானத்தில் வீதி உலாவும் நடந்தது.

வரும் 28ம் தேதி காலை 9:30 மணிக்கு மேல் தேர் திருவிழா நடைபெறுகிறது.சுகுமாறன் எம். எல்.ஏ., முன்னிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தேர் வடம் பிடித்து, தேரோட்டத்தை துவக்கி வைக்கிறார்.

மார்ச் 1-ம் தேதி காலை 6.30 மணிக்கு மாசி மக தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. மேலும், சங்க ராபரணி ஆற்றங்கரை வடக்கு பகுதியில் உள்ள ஒதியம்பட்டு காசி விஸ்வநாதர் கோவிலிலும் மாசிமக உற்சவம் நடைபெறுகிறது.

இரு இடங்களிலும் நடைபெறும்தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஆரியூர், வில்லியனூர், முத்திரையர் பாளையம், கரிக்கலாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களின் கோவில்களில் இருந்து சுவா மிகள் தீர்த்த வாரியில் கலந்து கொள்வர்.

திருக்காஞ்சி விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி சீத்தாராமன், கோவில் தலைமை குருக்கள் சரவண சிவாச்சாரியார் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி, விநாயகருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கூரம்: கூரம் கிராமத்தில் உள்ள கூரத்தாழ்வான் கோவிலில் இன்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
விருதுநகர்; திருச்சுழி அருகே ஸ்ரீ ராமதேவர் சித்தர் பீடத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
கோவை;  காரமடை அருகேயுள்ள படியனூர் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த அருள்மிகு பழநி ஆண்டவர் ... மேலும்
 
temple news
கம்பம்; காமயகவுண்டன்பட்டி ஸ்ரீ சுபத்ரா காளியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி ஆயிரத்தெட்டு விளக்கு பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar