பதிவு செய்த நாள்
02
மார்
2018
01:03
ஈரோடு: உலக நன்மைக்காக, கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், லட்சார்ச்சனை நடந்தது. மாசி மாத சதுர்த்தி திதி, மக நட்சத்திரம் அமைந்த நாளில், பெருமாளுக்கு அர்ச்சனை செய்தால், நினைத்தது நிறைவேறும். உலகம் நலம் பெறும்; சண்டை சச்சரவு நீங்கி, உலகில் அமைதி நிலவும் என்பது சான்றோர் வாக்கு. அதன்படி, ஈரோடு கோட்டை, கமலவல்லி தாயார் சமேத கஸ்தூரி ரங்கநாதர் கோவிலில், லட்சார்ச்சனை விழா, நேற்று நடந்தது. காலை, 5:15 மணிக்கு விஷ்வரூப தரிசனம், கோ பூஜை நடந்தது, அதை தொடர்ந்து கமலவல்லி தயாருக்கு திருமஞ்சன அபி?ஷகம், 7:00மணிக்கு சகஸ்ரநாம ?ஹாமம், 10:00 மணிக்கு, லட்சார்ச்சனை தொடங்கி, இரவு, 8:00 மணிக்கு நிறைவு பெற்றது. கோவை நாராயணன் சுவாமி தலைமையில், கோவில் பட்டாச்சாரியார்கள் லட்சார்ச்சனை நடத்தினர்.