Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராஜகுளத்தில் இன்று வரதர் ... கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் லட்சார்ச்சனை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுச்சேரியில் மாசிமக திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
புதுச்சேரியில் மாசிமக திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

02 மார்
2018
01:03

புதுச்சேரி: வைத்திக்குப்பம் கடற்கரையில் நடந்த மாசிமக தீர்த்தவாரியில், நுாற்றுக்கும்  மேற்பட்ட சுவாமிகள் எழுந்தருளின. வைத்திக்குப்பம் கடற்கரையில் மாசிமக தீர்த்தவாரி நேற்று  நடந்தது. தீவனுார் சுயம்பு பொய்யாமொழி  விநாயகர், செஞ்சி அரங்கநாதர், மயிலம்  சுப்ரமணியர், மேல்மலையனுார் அங்காளம்மன்,  திண்டிவனம் நல்லியக்கோடன் நகர் ஸ்ரீனிவாசப்  பெருமாள்,  தீவனுார் ஆதிநாராயணப் பெருமாள், லாஸ்பேட்டை சுப்ரமணியர், சின்ன சுப்புராயப்பிள்ளை வீதியில்  உள்ள அங்காள பரமேஸ்வரி, மணக்குள விநாயகர், வரதராஜ பெருமாள்,  முதலியார்பேட்டை வன்னியபெருமாள், கோட்டக்குப்பம் பச்சைவாழியம்மன் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட சுவாமிகள் மேள தாளத்துடன் ஊர்வலமாக வைத்திக்குப்பம் கடற்கரைக்கு எழுந்தருள செய்யப்பட்டன.

தீர்த்தவாரி முடிந்து, கடற்கரையில் வரிசையாக பக்தர்கள் தரிசனத்திற்காக நிறுத்தி வைக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகள் நகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மாசி மகத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அன்னதானம், மோர்  ஆகியன வழங்கப்பட்டன. மாசி மகத்தையொட்டி, கடற்கரையில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம்  செய்தனர். திருட்டு சம்பவங்களை தடுக்க, 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  50க்கும் மேற்பட்ட   இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும், பைனாக்குலர் மூலமும் கண்காணிக்கப்பட்டது. ஒளி பெருக்கி மூலம் பக்தர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
அவிநாசி; ராமியம்பாளையம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சென்றாய பெருமாள் கோவிலில் மஹா கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
சின்னாளபட்டி; மேட்டுப்பட்டியில் ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. காப்பு ... மேலும்
 
temple news
அவிநாசி; வேலாயுதம்பாளையம் ஊராட்சி காசி கவுண்டன் புதூர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜப்பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar