கும்பகோணம் அருகே தேப்பெருமாநல்லூர் என்ற தலத்தில் வேதாந்தநாயகி சமேத விஸ்வநாதசுவாமி கோயில் உள்ளது. இங்கு கருவறையில் உள்ள சிவலிங்கத்திற்கு எப்போதும் ருத்ராட்சத்தால் மட்டுமே அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது. அதனால் இறைவன் ருத்ராட்ச ஈஸ்வரர் என்ற சிறப்புப் பெயராலும் அழைக்கப்படுகிறார்.