பதிவு செய்த நாள்
23
மார்
2018
01:03
நாமக்கல்: நாமக்கல், நரசிம்ம சுவாமி கோவில் தேர்த்திருவிழா, இன்று துவங்குகிறது. நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற நரசிம்மர், அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்கள் உள்ளன. பங்குனி மாதம் தேர்த்திருவிழா நடக்கும். இந்தாண்டு விழா, கொடியேற்றத்துடன் இன்று துவங்குகிறது. தினந்தோறும் காலை, 8:00 மணி மற்றும் இரவு, 7:00 மணிக்கு, நரசிம்மர் மற்றும் அரங்கநாதர் சுவாமிகள் வீதி உலா நடக்கும். வரும், 29 மாலை, 6:00 மணிக்கு திருமாங்கல்ய தாரணம், பக்தர்கள் மொய் சமர்ப்பித்தல்; 30 இரவு, 7:00 மணிக்கு குதிரை வாகனத்தில் திருவேடுபரி உற்சவம் நடக்கிறது. 31 காலை, 10:35 மணிக்கு நரசிம்மசுவாமி திருத்தேர் வடம் பிடித்தல், மாலை, 4:30 மணிக்கு அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. ஏப்., 1 காலை, 10:00 மணிக்கு, திருமஞ்சனம், தீர்த்தவாரி, இரவு சத்தாவரணம் கஜலட்சுமி வாகனத்தில் சுவாமி எழுந்தருளுகின்றனர். ஏப்., 2ல் வசந்த உற்சவம், 3ல் விடையாற்றி உற்சவம், மின் அலங்காரம் நடக்கவுள்ளது. ஏப்., 4ல் புஷ்ப பல்லக்கு; 5 மற்றும் 6 தேதிகளில், ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை உதவி ஆணையர் ரமேஷ், தக்கார் வெங்கடேஷ் உட்பட பலர் செய்து வருகின்றனர்.