கன்னிவாடி:கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவர், உற்சவர், நந்திக்கு, 30 வகை அபிஷேகம் நடந்தது. உற்ஸவருக்கு ராஜ அலங்காரத்துடன், உள்பிரகார வலம் நடந்தது. விசஷே பூஜைகளுடன், மகா தீபாராதனை நடந்தது. தேவார, திருவாசக பாராயணம், அன்னதானம் நடந்தது. * தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. வாலை, சக்தி அம்மனுக்கு சிறப்பு திருமஞ்சன அபிஷேகம் நடந்தது. விசஷே மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. யோக ஆஞ்சநேயர், போகர், காளிங்க நர்த்தன கிருஷ்ணர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் திருவிளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.