திருநகர்: திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் தமிழ் புத்தாண்டையொட்டி அனுக்ஞை, விக்னஷே்வரர் பூஜை நடந்தது.மூலவர் விநாயகருக்கு 108 சங்காபிஷேகம், 108 கலசாபிஷேகம், 108 இளநீர், 108 திரவியங்கள், 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது.ஹார்விபட்டி பாலமுருகன் கோயிலில் மூலவருக்கு 100 லிட்டர் பாலாபிஷேகம் முடிந்து வெள்ளி கவசம் சாத்துப்படியானது. எஸ்.ஆர்.வி.,நகர் கல்கத்தா காளியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், விளக்கு பூஜை நடந்தது. தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் படி பூஜை, சந்தன அபிஷேகம் நடந்தது.