திருப்புத்துார்: கீரணிப்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஏப்.,1ல் பூச்சொரிதல் விழா நடந்தது. ஏப்.,8ல் உற்சவ அம்பாள் இளையாத்தங்குடியிலிருந்து வெள்ளி சிம்ம வாகனத்தில் கீரணிப்பட்டிக்கு எழுந்தருளினார். இரவில் அம்மன் வாகனங்களில் திருவீதி உலா நடந்தது. நேற்று காலை முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும்,காலை 10:00 மணிக்கு அம்மன் திருத்தேரில் எழுந்தருளலும் நடந்தது. மாலை 4:15 மணிக்கு தேரோட்டம் நடந்தது.இன்று மாலை அம்பாள் வெள்ளி சிம்ம வாகனத்தில் இளையாத்தங்குடிக்கு திரும்புதல் நடைபெறும்.