காடுபட்டி: சோழவந்தான் தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன், மூலநாதர் சுவாமி கோயிலில்ஆருத்ர திருவாதிரைப் பெருவிழா ஏப்., 21 நடக்கிறது. கடந்த ஜூன் 26 முதல் 2018 மார்ச் 25 வரை 11 மாதங்கள் ஆருத்ரா திருவாதிரை நட்சத்திரத்தன்று ருத்ரஜபம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேக ஆராதனைகள் கோயிலில் நடந்தன. ஏப்.,21 ஓராண்டு பூர்த்தியாவதால் அன்று காலை 7:40 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க ருத்ர ஏகாதசினியும், தொடர்ந்து மஹன்யாசம், 11 ஆவர்த்தி ருத்ரஜபம் மற்றும் 11 விதஅபிஷேகங்கள், ருத்ர ஹோமம் நடக்கின்றன. ஏற்பாடுகளை தென்கரை பிரதோஷ கமிட்டி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.