நாம் செய்யும் பாவ புண்ணியங்களின் கணக்குகளை எழுதி வைப்பவர் சித்ரகுப்தர். தென் திசைக் காவலனான யமதர்மனின் கணக்கு பிள்ளையான இவர், சித்திரைமாதம் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்ததால் ‘சித்ரகுப்தர்’ என பெயர் பெற்றார். தமிழகத்தில் சித்திரகுப்தர் கோயில் காஞ்சிபுரம் நெல்லுக்கடைத் தெருவிலுள்ளது. கருவறையில் சித்திர குப்தர், ஒரு கால் தொங்க விட்டு அமர்ந்த நிலையிலும், ஒரு கையில் ஓலைச்சுவடி, மறு கையில் எழுத்தாணியும் கொண்டு வீற்றிருக்கிறார். சித்ராபவுர்ணமியன்று இங்கு அஷ்ட ஐஸ்வர்ய கலச பூஜை, அபிஷேகம், அலங்காரம் செய்யப்படும். மாலையில் சித்திர குப்தருக்கும், கர்ணிகாவுக்கும் திருக்கல்யாணம் நடக்கும்.