அமாவாசையில் இருந்து மூன்று நாள் வரும் திதி திரிதியை. இவற்றில் மிக உயர்ந்தது அட்சய திரிதியை. மூன்றாம் பிறை பார்த்தால் செல்வவளம் பெருகும். மூன்றாம் பிறை என்றால் என்ன தெரியுமா? சந்திரனுக்கு தட்சன் தன் 27 மகள்களையும் திருமணம் செய்து கொடுத்தார். அவர்களில் ரோகிணி, கார்த்திகை ஆகிய மனைவிகள் மீது மட்டும் அதிக பாசம் கொண்டார். இதனால், மனம் வருந்திய மற்ற மனைவிகள் தங்கள் தந்தையிடம் புகார் செய்தனர். “நீ அழகாய் இருப்பதால் தானே ஆட்டம் போடுகிறாய். உன் முகப் பிரகாசம் மறையட்டும்,” என்று சாபமிட்டார். இதையறிந்த ரோகிணியும், கார்த்திகையும் தட்சனிடம் சென்று அவரது சாபத்தை திரும்பப்பெற வலியுறுத்தினர். தட்சனுக்கு அப்போது தவ வலிமை குறைந்திருந்ததால் அவனால் சாபத்தை திரும்பப் பெற முடியவில்லை. உடனே அந்தப் பெண்கள் சிவனை நினைத்து கடும் தவத்தில் ஈடுபட்டனர். மகிழ்ந்த சிவன் அவர்களுக்கு காட்சியளித்தார். சந்திரனை தன் சிரசில் மூன்றாம் பிறையாக அமரும் பாக்கியத்தை அருளினார். திரிதியை அன்று சந்திரப் பிறையை வணங்கினால், சிவனின் சிரசையே நேரில் கண்டதாக அர்த்தம். இதைப் பார்ப்பவர்கள் சகல செல்வமும் கிடைக்கும்.