மகாபலியிடம் மூன்றடி மண் கேட்டு, குள்ளமான அந்தணர் வேடத்தில் வாமனராக வந்த மகாவிஷ்ணு, திரிவிக்ரமனாக எழுந்து உலகளந்தார். அவருடைய திருவடி மண்ணுலகை அளந்ததும், விண்ணுலகை எட்டியது. இதைக்கண்ட பிரம்மா மகிழ்ச்சியடைந்து, கமண்டலநீரால் பெருமாளின் பாதத்திற்கு அபிஷேகம் செய்தார். அந்த புனிதநீர் விஷ்ணுவின் பாதத்தில் அணிந்திருந்த சிலம்பில் பட்டு பூலோகத்தில் கொட்டியது. அது ஆறாகப் பெருகி ஓடியது. அதுவே ‘சிலம்பாறு’ என்னும் பெயரில் அழகர்மலையில் உற்பத்தியாகிறது. இந்த சிலம்பாற்றையே ‘நுõபுரகங்கை’ என்கின்றனர். ‘நுõபுரம்’ என்றால் ‘சிலம்பு.’ அழகர்கோவிலில் உற்சவமூர்த்தியான கள்ளழகருக்கு இந்த தீர்த்தத்தால் மட்டுமே அபிஷேகம் செய்வர். வேறு எந்த தீர்த்தத்தில் அபிஷேகம் செய்தாலும் பெருமாளின் திருமேனி கருத்துவிடும். நுõபுர கங்கையில் நீராடினால் நம் விருப்பங்கள் நிறைவேறும் என்பதால் அதற்கு ‘இஷ்டசித்தி’ என்றும், பிறவியைப் போக்குவதால் ‘பவஹாரி’ என்றும் பெயர்கள் உண்டு.