மரத்தால் செய்யப்படும் லிங்கங்களுக்கு தாரு லிங்கம் என்று பெயர். சிவன்கோயில்களில் கும்பாபிஷேக காலங்களில் மூலலிங்கத்தைப் பெயர்த் தெடுத்து, அதன் ஆற்றலை தாரு லிங்கத்தில் ஆவாஹனம் செய்து, திருப்பணி முடியும் வரை அந்த லிங்கத்தை மூலலிங்கமாக வழிபட்டு வருவார்கள். தேவதாரு, வன்னி, அரசு, அகில், கருங்காலி, வேங்கை, வில்வம் ஆகிய மரங்களில் தாரு லிங்கம் உருவாக்கப்படுகிறது.