Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்சானுார் பத்மாவதி தாயார் ... புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் பூக்குழி புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குடந்தை சாரங்கபாணி சுவாமி கோவில் சித்திரை தேரோட்டம்
எழுத்தின் அளவு:
குடந்தை சாரங்கபாணி சுவாமி கோவில் சித்திரை தேரோட்டம்

பதிவு செய்த நாள்

30 ஏப்
2018
02:04

தஞ்சாவூர்: கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோவிலில், சித்திரைப் பெருவிழா தேரோட்டம் நடந்தது. 108 திவ்யதேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்தாற்போல் சிறந்த தலமாகப் போற்றப்படுவதும், தமிழ் வேதமாக கருதப்படும் நாலாயிர திவ்யபிரபந்தம் விளைந்த தலமாகவும், ஏழு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட, மிகப்பழமை வாய்ந்தது, கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோவில்.

சுவாமி எழுந்தருளல்: இந்த கோவிலில் சித்திரைப் பெருவிழா, 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, 24ம் தேதி ஒரே ஓலைச்சப்பரத்தில் சாரங்கபாணிசுவாமியும், சக்கரபாணிசுவாமியும் வீதிவுலா வந்தனர். தொடர்ந்து, நேற்றுமுன்தினம், 28ம் தேதி வெண்ணெய்த்தாழி அலங்காரம் நடைபெற்றது. விழாவின் முக்கிய விழாவான சித்திரை விழா நேற்று நடந்தது. முன்னதாக நேற்று அதிகாலை, 4 மணிக்கு, பெருமாள் உபய நாச்சியார்களுடன் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. பின் நான்கு வீதிகளிலும், ஏராளமான பக்தர்கள் சாரங்கா சாரங்கா என்று கோஷமிட்டவாறு, தேர் வடம்பிடித்து இழுத்தனர். தொடர்ந்து, பின்னர் இரவு, 10 மணிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

சம்பிரதாய விழா; களையிழந்த தேரோட்ட விழா: கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேரோட்டம், வெகுசிறப்பாக நடக்கும் விழாக்களில் ஒன்று. ஆனால் இந்த ஆண்டு தேர் செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல், தேரோட்டம் ஒரு சம்பிரதாய விழாவாக நடந்தது. ஆக்கிரமிப்புகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்யப்பட்டு, அதற்கு ஏற்றவாறு பணிகள் நடைபெறுவதுண்டு. ஆனால், கடந்த இரு ஆண்டுகளாக இந்த கூட்டம் ஏதும் நடத்தப்படுவதில்லை. இதனால் தேரோட்டம் ஒரு சம்பிரதாய விழாவாக நடந்தது. தேரோட்டத்துக்கு சாரங்கபாணி கோவில் பணியாளர்களை தவிர, அறநிலையத்துறை அதிகாரிகள் யாரும் வரவில்லை.

அதிருப்தி: குறிப்பாக, கும்பகோணம் உதவி கமிஷனர் பங்கேற்காததால், கோவில் பணியாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. பல ஆண்டுகளாக தேருக்கான திரைச்சீலைகள், தொம்மைகள் மாற்றப்படாமல் இருந்ததால், தேரில் கட்டப்பட்ட இவையனைத்தும் வெளுத்து போய் வண்ணங்கள் நிறம் மாறியிருந்தது.

பரபரப்பு: இவற்றை மாற்றித்தர பல உபயதாரர்கள் இருந்தும் கோவில் நிர்வாகத்தின் அலட்சியமே இதற்கு காரணம் என, பக்தர்கள் குமுறினர். கும்பகோணம் பெரிய தெரு திருப்பத்தில் தேர் திரும்பும்போது, ஆக்கிரமிக்கப்பட்ட கட்டிடங்களில், தேர் குதிரை பொம்மைகள் மோதியதில், ஒரு குதிரை பொம்மை அறுந்து கீழே விழுந்தது. இதனால் பக்தர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி, விநாயகருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கூரம்: கூரம் கிராமத்தில் உள்ள கூரத்தாழ்வான் கோவிலில் இன்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
விருதுநகர்; திருச்சுழி அருகே ஸ்ரீ ராமதேவர் சித்தர் பீடத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
கோவை;  காரமடை அருகேயுள்ள படியனூர் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த அருள்மிகு பழநி ஆண்டவர் ... மேலும்
 
temple news
கம்பம்; காமயகவுண்டன்பட்டி ஸ்ரீ சுபத்ரா காளியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி ஆயிரத்தெட்டு விளக்கு பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar