பதிவு செய்த நாள்
05
மே
2018
11:05
திருவண்ணாமலை: அக்னி நட்சத்திர வெயிலை முன்னிட்டு, அருணாசலேஸ்வரருக்கு வரும், 28 வரை தாராபிஷேகம் நடத்த, தாரா பாத்திரம் பொருத்தப்பட்டது. அக்னி நட்சத்திரம் எனப்படும், கத்திரி வெயில் நேற்று தொடங்கியது. இதை முன்னிட்டு, அருணாசலேஸ்வரரின் திருமேனியை குளிர்விக்கும் வகையில், நேற்று முதல் வரும், 28 வரை தாராபிஷேகம் செய்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு பூஜை செய்யப்பட்ட தாரா பாத்திரத்தில் வெற்றிவேர், சந்தனம், ஜவ்வாது உள்ளிட்ட வாசனை திரவியங்கள் போடப்பட்ட புனித நீர் காலை, 9:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை, துளி துளியாய் அருணாசலேஸ்வரரின் திருமேனியில் விழுந்து, அபிஷேகம் செய்விக்கும் வகையில் பொருத்தப்பட்டது. அக்னி நட்சத்திரத்தின் நிறைவாக, சிறப்பு யாகம் நடத்தப்பட உள்ளது. இதே போன்று திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள, திருநேர் அருணாசலேஸ்வரர் கோவிலிலும், தாரா பாத்திரம் பொருத்தப்பட்டது.