Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆனாங்கூர் கோவிலில் கும்பாபிஷேக ... உலக நன்மை வேண்டி கைலாசநாதர் கோவிலில் நவசண்டி யாகவிழா உலக நன்மை வேண்டி கைலாசநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மலைக்கோட்டைக்கு எழுந்தருளிய பெருமாள்: கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
மலைக்கோட்டைக்கு எழுந்தருளிய பெருமாள்: கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

10 மே
2018
12:05

சங்ககிரி: சங்ககிரி மலை மீது உள்ள சென்னகேசவப் பெருமாள் சித்திரை திருவிழாவில், 1ம் நாளான நேற்று, சுவாமி மலைக்கு எழுந்தருளினார். சித்திரை திருவிழா, சங்ககிரி மலைக்கோட்டை சென்னகேசவப் பெருமாள் கோவிலில், கடந்த, 21ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அங்கிருந்து, நகருக்குள் எழுந்தருளிய சுவாமி, ஒவ்வொரு நாளும், அன்னபட்சி வாகனம், சிங்கம், அனுமந்தன், கருடன், சேஷ, யானை ஆகிய வாகனங்களில் அருள்பாலித்தார். நேற்று முன்தினம், சுவாமிக்கு ஊஞ்சல் உற்சவ வைபவ விழா நடந்தது. நேற்று காலை, சென்ன கேசவப் பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, பூதேவி உற்சவ மூர்த்தி சுவாமிகள், மலைக்கு எழுந்தருளினர். அதில், திரளான பக்தர்கள், கோவிந்தா கோஷமிட்டபடி சென்றனர். மலை உச்சிக்கு சென்ற சுவாமிக்கு, குறிஞ்சி அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது.

மழையில் நனைந்தபடி... : பனமரத்துப்பட்டி, ச.ஆ.பெரமனூர் மாரியம்மன் கோவிலில், நேற்று அதிகாலை, மா விளக்கு ஊர்வலம், பொங்கல் வைபவம் நடந்தது. அதையொட்டி, சமயபுரம் மாரியம்மன், சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். மாலை, கோவில் வளாகத்திலிருந்து அலங்கரிக்கப்பட்ட தேரை, பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச்சென்றனர். வழிநெடுகில், ஏராளமானோர் வழிபட்டனர். கொட்டும் மழையில், பக்தர்கள் நனைந்தபடி, தேரை, கோவிலுக்கு கொண்டு வந்து சேர்த்தனர். இன்று அலகு குத்துதல், அக்னி கரகம் உள்ளிட்டவை நடக்கவுள்ளது.

தீ மிதித்த பக்தர்கள்: ஓமலூர், பெரியமாரியம்மன், சின்னமாரியம்மன், திரவுபதி அம்மன் ஆகிய கோவில்களில், சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. நேற்று காலை, மாரியம்மன் சர்வ அலங்காரத்தில் வீதி உலா வந்தார். இரவு, திரவுபதி அம்மன் கோவிலில், குண்டம் இறங்குதல் நடந்தது. முன்னதாக, கனமழை பெய்தபோதும், தொடர்ந்து குண்டம் எரியவிட்டு, பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். காமலாபுரம் மாரியம்மன் கோவிலில், நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலை, திரளான பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலமாக சென்றனர். மூலவர் அம்மன், மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

* தலைவாசல், சிறுவாச்சூர், ஏரிக்கரையை ஒட்டியுள்ள, புது மாரியம்மன் கோவிலில், நேற்று காலை, பொங்கல் வைத்து, மாவிளக்கு ஏற்றி பெண்கள் வழிபட்டனர். அதேபோல், தலைவாசல் ஏரி பின்புறமுள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில், பொங்கல் வைத்து, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏராளமான பக்தர்கள், முக்கிய வீதிகள் வழியாக, பால்குடம் சுமந்து, ஊர்வலமாக, கோவிலை அடைந்தனர்.

பொங்கல் வைபவம்
: சேலம், அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவிலில், நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை நடந்தது. தொடர்ந்து, 100க்கும் மேற்பட்ட பெண்கள், பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். பல பக்தர்கள் அலகுகுத்தி, அக்னி கரகம் மற்றும் பூங்கரகம் எடுத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar