Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மட்டவளம் கோவிலில் பிரதோஷ விழா கள்ளக்குறிச்சி சிவன் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவள்ளூர் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மே
2018
12:05

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில், பிரதோஷ வழிபாட்டினை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. திருவள்ளூர் அடுத்த, ஈக்காடு திரிபுர சுந்தரி சமேத பஞ்சவர்ணேஸ்வரர் கோவிலில், பிரதோஷ வழிபாடு, நேற்று மாலை நடந்தது. திருவள்ளூர், தீர்த்தீஸ்வரர் கோவிலில், அபிஷேகம், ஆராதனையை தொடர்ந்து, சிவபெருமான் ரிஷப வாகனத்தில், உட்பிரகாரத்தில் வலம் வந்தார். பூங்கா நகர், சிவ - -விஷ்ணு கோவிலில் எழுந்தருளி உள்ள புஷ்பவனேஸ்வரர், பெரியகுப்பம், ஆதிசோமேஸ்வரி உடனுறை ஆதிசோமேஸ்வரர் கோவில், திருப்பாச்சூர், தங்காதலி அம்மன் உடனாய வாசீஸ்வரர் கோவில், காக்களூர், திரிபுர சுந்தரி அம்பாள் உடனுறை பாதாள லிங்கேஸ்வரர் கோவில், தொட்டிக்கலை சிவகாமி சுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவில் ஆகிய இடங்களில், பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது.

திருத்தணி: திருத்தணி அடுத்த, நாபளூர் கிராமத்தில், காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று, பிரதோஷ விழாவையொட்டி, வடூக பைரவர், நந்தி மற்றும் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை, 6:30 மணிக்கு, உற்சவர் சிவன் -- பார்வதி அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி, கோவில் வளாகத்தை, மூன்று முறை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதே போல், திருத்தணி, நந்தி ஆற்றங்கரையோரம் உள்ள வீரட்டீஸ்வரர் கோவில், பழைய தர்மராஜா கோவில் தெருவில் உள்ள சதா சிவலிங்கேஸ்வரர், அகூர் திருவேட்டீஸ்வரர் கோவில்களில், பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. இதே போல், நகரி டவுனில் அமைந்துள்ள கரகண்டீஸ்வரர் கோவிலில் நடந்த பிரதோஷ வழிபாடு விழாவில், திரளான பக்தர்கள் வழிபட்டனர். - நமது நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் ... மேலும்
 
temple news
சென்னை :  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை :திருஇந்தளுர் பரிமள ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு- பெருமாள் மங்கள கிரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் :வைகுண்ட ஏகாதசியையொட்டி, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று காலை 5:30 மணிக்கு ... மேலும்
 
temple news
கோவை;வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் பரமபத வாசல் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar