நல்வாழ்விற்கு இஸ்லாம் கூறும் பொன்மொழிகளை கேளுங்கள்.நானே பெரியவன், சிறந்தவன் என்ற அகந்தையை கைவிடுங்கள். எந்த பிரச்னையையும் நாசூக்காக கையாளுங்கள். நீங்கள் சொன்னதே சரி என்று பிடிவாதம் பிடிக்காதீர்கள். உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல், இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும், அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் கைவிடுங்கள். கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் உணர்ச்சி வசப்பட்டு நம்பி விடாதீர்கள். அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்தி ஆர்ப்பாட்டம் செய்யாதீர்கள். பணம், பதவி உங்களிடம் இருந்தாலும் பணிவோடு நடந்து கொள்ளுங்கள். அவ்வாறு செய்தால் இன்னும் பெரிய பதவிகள் உங்களைத் தேடி வரும். பிரச்னை வரும் போது, அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல், நீங்களே பேச்சைத் துவக்குங்கள். உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்துக் கர்வப்படாதீர்கள். எதையும் தேவைக்கு அதிகமாய் எதிர்பார்க்காதீர்கள். அர்த்தமில்லாமலும், தேவையில்லாமலும், பின்விளைவு அறியாமலும் பேசிக்கொண்டே இருப்பதைக் கைவிடுங்கள். புன்னகை செய்யவும், சின்னச்சின்ன அன்புச்சொற்களைக் கூறவும், நன்றி சொல்லவும் மறந்து விடாதீர்கள். நாக்கு நேர்மையாக இருக்கு மானால் ஒருவனுடைய இதயம் நேர்மையான வழியில் செல்லும்.