* இதயத்தில் கடவுளை தேடுங்கள். அங்கு கருணை இருந்தால் அவரது அருள் கிடைக்கும். * கடவுளை அடைவதற்கு குறுக்கு வழி எதுவும் கிடையாது. உண்மை ஒன்றே ஒரே வழி. * நற்செயல் செய்வதற்காக கடவுளால் படைக்கப்பட்ட கருவிகளே மனிதர்கள். * அருளின் உயர்ந்த வடிவம் மவுனம். அதுவே உயர்ந்த உபதேசமும் கூட. வாயை மட்டும் மூடிக் கொண்டு மனதை அலைபாய விடுவது மவுனம் ஆகாது. அதனால் எந்தப் பயனும் இல்லை. * மனதை எண்ணங்களிலிருந்து விடுவிப்பதே ஆன்மிக சாதனையின் நோக்கமாகும். * மந்திரங்களை இடைவிடாது சொல்வதால் மனம் அடங்கும். அந்நிலையில் மந்திரம், மனம், மூச்சு என எல்லாம் ஒன்றே என்பதை உணரலாம். * சுயமாக இயங்க முடியாததற்கு காரணம் வலிமையற்ற மனமே. குறை எப்போதும் வெளியில் இருக்காது; மனதில் தான் இருக்கிறது. * அகந்தையை துறந்தால் ஆண்டவனின் அருள் உண்டாகும். தினமும் புதுப்புது ஆசைகளை மனதில் வளர்க்காதீர்கள். மீறினால் தேவையற்ற சுமைகளை சுமக்க நேரிடும். * நான் யார் என்பதை அறிந்து கொள்ளவே, மந்திரம், தவம், வழிபாடு எல்லாம் இருக்கிறது.