Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோயிலில் இசை மற்றும் நாட்டியப் ... பஞ்சபேத வாத்தியங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வாத்திய பேதம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மே
2018
02:05

கோயில்பூஜை விழாக்களில் நால்வகை வாத்திய உபச்சாரம் விதிக்கப்படுகிறது. பொதுவாக இசைக்கருவிகளை சிவாகமம் நான்கு வகையாகப் பகுத்துக்கூறுகிறது. ததம், ஆனத்தம், க்ஷிரம், கனம் என்று வாத்தியங்கள் நால்வகையாகும். அதாவது வாதகரால் அடித்து மீட்டப்படுபவை ததம் ஆகும். வீணை, தம்புரா, வயலின் போன்று கையால் மீட்டக்கூடிய நரம்புநாளமுள்ள கருவிகள்யாவும் ததவாத்தியம் எனப்படும், முரஜம், முரசு, தபேலா, மத்தளம், மேளம் (தவில்), பேரீ முதலான அடித்து ஒலி எழுப்பக்கூடிய தோல்கட்டிய இசைக்கருவிகள் ஆனத்தம் (ஆஹதம் - அடித்து வெளிப்படுத்துதல்), ஆஹத வாத்தியம் எனப்படுபவை மூங்கில் முதலான மரத்தினாலானதும். துளையிட்டுக் காற்றை அடைத்தும் எழுப்பியும் இசைக்கும் துளைக்கருவிகளான புல்லாங்குழல், நாதஸ்வரம், மகுடி முதலானவை சுஷிரவாத்தியம் எனப்படும். (சுஷிரம் - துளை), வெங்கலம் முதலிய - உலோகத்தாலான சிறுதாளம், பெரிய பிரம்ம தாளம், ஜல்லரீ (ஜால்ரா) கைமணி, எக்காளம், திருச்சின்னம் துந்துபி முதலான உலோகத்தின் மெல்லிய கன வடிவமைப்பு கொண்டதுமான உலோகக்கருவிகள் கனவாத்தியம் எனப்படும்.

தெய்வத்திற்கு உற்சவம் பயணமாகப் புறப்பாடு எங்கு செய்யப்படுகிறதோ அங்கு தவறாது வாத்திய கோஷத்துடனேயே செய்யப்படவேண்டும். வாத்தியமின்றி ஊர்வலம், வீதியுலா, கோயில்வலம், புறப்பாடு ஆகியவற்றைச் செய்வது  குற்றமாகும். சுவாமி புறப்பாட்டை ஊரை வலமாகவும், மெதுவாகவும் செய்வதுமுறை.

ஆகமங்களில் நீராட்டல், நிவேதித்தல், தூபதீபாதிக காலம், சுற்றும் காலம், அதிகாலை ஆகிய முக்கியமான ஐந்து காலங்களில் வாத்திய கோஷத்தைத் தவறாமல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

சச்சபுடம், ஆரபுடம், உத்கடிதம், மஹோஜ்வலம், சிம்மகர்ணம், லட்டயம், (மட்டயம்), கண்டீரவம், விலாஸிநீ, லம்புகம் சிம்ஹநாதம், ஜம்புடம், சிம்மவாத்யம், கும்பவாத்யம், கர்ணவாத்யம், பலகாவாத்யம், மிருதுபாஷிணீ, அனங்கவாத்யம், சங்கிநீ, வீரம், புஷ்பபட்டஸம், நாதம், ஹூங்காரம், வல்லீ, ஜாமிநீ, மதனீ, ஸந்தியாவாத்யம், வாஞ்சிநீ ஆகியவை 27 வகை வாத்தியக்கருவிகளாக உத்தர காரணாகமத்தில் கூறப்பட்டுள்ளன. மேலும் இயற்கை ஒலிகளை எழுப்பும் பலவகை இசைக்கருவிகளும், இன்னிசைக் கச்சேரிகளுக்கு உரியவையும் ஏற்புடைய வாத்யங்களே ஆகும். இந்த வாத்ய யோபசாரம் துவனி மந்திர நாதரூபமான இறைவனுக்கு, உத்தமமான நாத உபாசன ரூபமான சிறந்த உபசாரமாகிறது. ஊர்வலத்தின்போது யானை, ஒட்டகம், குதிரை, காளை, ஆகியவற்றின்மேல், முதுகில் படகம் முதலிய இசைக்கருவிகளை வைத்து வாசிக்குமாறு காரணாகம ஸ்வாமி புறப்பட்டு விதிமுறை கூறுகிறது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar