ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் கத்தி போடும் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூன் 2018 11:06
பேரையூர், பேரையூர் அருகே பி.தொட்டியபட்டி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் பொங்கல் விழா.கடந்த மே26ம் தேதி தொடங்கியது. இதில் கத்தி போடும் அலகு சேவையுடன் சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில், சிறுவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட வீரகுமாரர்கள் கத்தி போட்டு ஊர் வலமாக சென்றனர். சிறுமி கள் தீர்த்தக்குடம் சுமந்து வந்தனர். சக்தி அழைத்தல் ஊர்வலம், பேரையூர் பெருமாள் கோவிலிருந்து, சவுடேஸ்வரி அம்மன் கோவிலை அடைந்தது. நேற்று இரவு முளைப்பாரி ஊர்வலத்துடன் பொங்கல் விழா நிறைவு பெற்றது.