போதகர் டி.எல்.மூடி என்பவரது வாழ்க்கை வரலாற்றை ஆசிரியர் ஒருவர் எழுதினார். நூலில் அவர் குறிப்பிட்டிருந்த விஷயம் படிப்பவரை பிரம்மிப்பில் ஆழ்த்தியது. “அவர் அமெரிக்கா கண்டத்தை ஒரு கையிலும், ஐரோப்பா கண்டத்தை மறுகையிலும் ஏந்தி அசைக்கும் தெய்வ பலமுள்ள வராய் இருந்தார்,” என குறிப்பிட்டுள்ளார். ஒரு போதகரால் இந்தளவுக்கு இரு கண்டங்களையே அசைக்க முடிந்திருக்கிறது என்றால், அதற்கு காரணம் அவரது ஊக்கமான, உருக்கமான ஜெபம் தான். ஜெபவீரரான அவர், பரமபிதாவான ஆண்டவருடைய பாதத்தில் விழுந்து ஜெபித்து தன் உடலையும், ஆத்மாவையும் பலப்படுத்திக் கொண்டார். “சோர்ந்து போகிறவனுக்கு அவர் பலம் கொடுத்து, சத்துவமில்லாத வனுக்கு சத்துவத்தைப் பெருகப்பண்ணுவார்,”‘ என்ற வசனம் போதகரின் வாழ்விற்கு உதாரணம்.