நாத்திகவாதி ஒருவர் கிறிஸ்தவரிடம் கேட்டார், “பரிசுத்த ஆவி என ஒருவர் இருப்பதை நான் நம்பவில்லை. ஏன் தெரியுமா? அவரை ஒருவரும் கண்டதில்லை. காணாததை நான் எப்படி நம்புவது?” என சந்தேகத்தை வெளிப்படுத்தினார். கிறிஸ்தவர் அவரிடம், “நீங்கள் உங்கள் இருதயத்துடிப்பை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?” என கேட்டார். “இல்லை... நான் பார்த்ததில்லை” என்றார். இருதயத்துடிப்பை உணர்ந்திருக்கிறீர்களா?” “ஆம்... என் நெஞ்சிலே கை வைக்கும் போது உணர்ந்துள்ளேன்,” “அது போலத்தான் ஆண்டவரை நாம் கண்டதில்லை. ஆனால் அவரை உணர்கிறோம். அவரை ருசிக்கிறோம். அவர் காணப்படாத வராக இருந்தாலும், மெய்யானவராய், உணரக் கூடியவராய் இருக்கிறார். அவர்நம்மை எழுப்புகிறார். அருமையாய் வழிநடத்திச் செல்கிறார். தேற்றி ஆற்றுகிறார். செயல் ஊக்கம் கொடுக்கிறார். நமக்காக பிதாவினிடம் வேண்டுதல் செய்கிறார்” என்றார். நாத்திகவாதி வாயடைத்துப் போனார்.