பழநி, பழநி முருகன் கோயில் உண்டியல் இரண்டு நாட்கள் எண்ணிக்கையில், மொத்தம் ரூ. ஒரு கோடியே 91 லட்சத்து 58 ஆயிரம் வசூலாகியுள்ளது.பழநி முருகன் மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் இரண்டாவது நாளாக உபகோயில்களின் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. இதில் தங்கம் 235கிராம், வெள்ளி 6ஆயிரத்து 460கிராம், வெளிநாட்டு கரன்சிகள் 74ம், ரொக்கமாக ரூ. 40 லட்சத்து 5ஆயிரத்து 520 கிடைத்துள்ளது. முதல்நாள் ரூ. ஒரு கோடியே 51லட்சத்து 53ஆயிரத்து 050 கிடைத்தது. ஆகமொத்தம் 21 நாட்களில் ரூ. ஒரு கோடியே 91 லட்சத்து 58 ஆயிரம் வசூலாகியுள்ளது.இணை ஆணையர் செல்வராஜ், மதுரை மண்டல இணை ஆணையர் பச்சையப்பன், துணைஆணையர்(பொ) செந்தில்குமார், கல்லுாரி, வங்கி, கோயில் அதிகாரிகள் பங்கேற்றனர்.