Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சமஸ்டி உபநயனம் பழநி திருஆவினன்குடி கோயிலில் கார்த்திகை சிறப்பு வழிபாடு பழநி திருஆவினன்குடி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமாயண சுற்றுலா செல்ல ரயில்வே சிறப்பு ஏற்பாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2018
12:07

புதுடில்லி: ராமாயணத்துடன் தொடர்புள்ள இடங்களுக்கு சுற்றுலா செல்லும் வகையில், ரயில்வே துறை, நவ., 14 முதல், 16 நாட்களுக்கு சிறப்பு ரயில் இயக்க திட்டமிட்டுள்ளது.இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:ராமாயணத்துடன் தொடர்புடைய, அயோத்தி முதல், இலங்கையின் கொழும்பு வரையிலான இடங்களுக்கு, ராமேஸ்வரம் வழியாக, நவ., 14ல், சிறப்பு ரயில் இயக்கப்படும். டில்லியில் இருந்து புறப்படும் இந்த ரயில், 16 நாட்கள், பயணியரை சுற்றுலா அழைத்து செல்லும்.இந்த ரயிலில், 800 பேர் பயணிக்கலாம். சுற்றுலாவின் கடைசி கட்டமாக இலங்கை செல்ல விரும்புவோர், சென்னையில் இருந்து விமானம் மூலம் செல்லலாம்.சிறப்பு ரயிலுக்கு, ஸ்ரீராமாயணா எக்ஸ்பிரஸ் என, பெயரிடப்பட்டுள்ளது. இந்தியாவுக்குள், இதற்கான பயண கட்டணம், ஒரு நபருக்கு, 15 ஆயிரத்து, 120 ரூபாய். ரயிலில் பயணியருக்கு உணவு வழங்கப்படும். சுற்றுலா தலங்களில் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்படும். ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக அதிகாரிகள், பயணியரின் தேவைகளை கவனிப்பர்.டில்லி, சப்தர்ஜங் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், முதல் பயணமாக, ராமரின் பிறந்த தலமான, அயோத்தியில் நிறுத்தப்படும். பின், நந்திகிராம், சீதாமர்கி, ஜனக்பூர், வாரணாசி, பிரயாக், சிறிங்கவேர்புர், சித்ரகூட், நாசிக், ஹம்பி, ராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும். ரயில் நிலையத்தில் இருந்து, சாலை வழியாக சுற்றுலா தலம் செல்வதற்கான ஏற்பாடுகளை, ரயில்வே கவனித்துக் கொள்ளும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar