Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! பரமபத வாசல் அடைவது எப்படி? பரமபத வாசல் அடைவது எப்படி?
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு போலீசார் வேண்டுகோள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

24 ஜன
2012
10:01

பொள்ளாச்சி : பழநி பாதயாத்திரை பக்தர்கள் ரோட்டோரத்தில் அமைதியாக நடந்து செல்ல வேண்டும், ரோட்டோரத்தில் படுத்து உறங்க வேண்டாம் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கோவை, மேட்டுப்பாளையம் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் இருந்து பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை வழியாக செல்கின்றனர். அதேபோன்று கேரளா மாநிலத்தில் இருந்து வரும் பக்தர்களும் பொள்ளாச்சி வழியாக பழநிக்கு பாதயாத்திரை செல்கின்றனர். இதனால், பொள்ளாச்சியில் கோவை, பாலக்காடு, மீன்கரை, உடுமலை ரோடுகளில் பழநி பாதயாத்திரை பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பாதயாத்திரையை அதிகாலை 4.00 மணிக்கு துவங்கி, காலை 10.00 மணிக்குள் நிறைவு செய்து பகலில் ஓய்வு எடுக்கின்றனர். மாலை 4.00 மணிக்கு பாதயாத்திரையை துவங்கி இரவு 12.00 மணிக்கு நிறைவு செய்கின்றனர். பொள்ளாச்சி வழித்தடத்தில் செல்லும் பாதயாத்திரை பக்தர்கள் அனைவரும் தேசிய நெடுஞ்சாலையை மட்டுமே பயன்படுத்த முடிகிறது. பக்தர்கள் கும்பலாக செல்லும் பகுதிகளில் வாகனங்கள் மெதுவாக நின்று செல்கின்றன. இந்நிலையில் பாதயாத்திரை பக்தர்கள் விபத்தை தவிர்க்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டுமென்று பொள்ளாச்சி போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பக்தர்கள் கூட்டமாக செல்லும் இடங்களில் போலீசார் மைக் மூலம் அறிவுத்தல் விடுக்கின்றனர்.

போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் இரவு நேரத்தில் பெரும்பாலும் தார் ரோட்டில் நடந்து செல்கின்றனர். தை அமாவாசை நிறைவடைந்து விட்டதாலும், தைப்பூசம் பிப்., 7ம் தேதி வருவதாலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால், தேசிய நெடுஞ்சாலையில் இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் பாதயாத்திரை பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க துவங்கியுள்ளது. ரோட்டில் வாகனங்களும் வேகமாக வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இரவு நேரத்தில் ரோட்டோரத்தில் பாதயாத்திரை பக்தர்கள் ஓய்வு எடுக்கின்றனர். பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ரோட்டோரத்தில் பாதுகாப்பாக நடந்து செல்ல வேண்டும். ரோட்டோர மர நிழலில் படுத்து தூங்கக்கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மேலும், நெடுஞ்சாலை ரோந்து போலீசாரும், அந்தந்த பகுதி போலீசாரும் இரவு ரோந்தின் போது, பாதயாத்திரை பக்தர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா நேற்று(ஜன.28) ... மேலும்
 
temple news
திருவாடானை: முகூர்த்த நாளில் திருவாடானை கோயில் முன்பு குவிந்த வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஜன. 29-–: ஸ்ரீவில்லிபுத்துார் வடபத்ர சயனர் கோயில் ராஜகோபுரம்,விமானங்களை புனரமைத்து ... மேலும்
 
temple news
செஞ்சி: காரை அங்காள பரமேஸ்வரி கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.செஞ்சி அடுத்த காரை கிராமத்தில் புதிதாக ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ரிஷபேஷ்வரர் கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்தில் சன்னதி கலசத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar