பழநி: பழநி முருகன் கோவில், ரோப்கார் ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக இன்று முதல், 40 நாட்கள் நிறுத்தப்படுகிறது. பழநி முருகன் மலைக்கோவிலுக்கு எளிதாக, மூன்று நிமிடத்தில் பக்தர்கள் சென்று வரும் வகையில், ரோப்கார் இயக்கப்படுகிறது. இது ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக இன்று முதல் நிறுத்தப்படுகிறது.புதிய கம்பிவடம் பொருத்தி, தேய்மான பாகங்களை மாற்றி, பெட்டிகள் புதுப்பிக்கப்படுகிறது. இப்பணிகள் தொடர்ந்து, 40 நாட்கள் வரை நடைபெறும். அதன்பின் சோதனை ஓட்டம் நடத்தப்படும். அதில் பக்தர்களின் பாதுகாப்பான பயணம் உறுதிசெய்யப்பட்டபின், ரோப்கார் மீண்டும் இயக்கப்படும் என, இணை ஆணையர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.