பொதுவாக கோயில்களில் அம்மனுக்கு முன் சிம்ம வாகனம் இருக்கும். ஆனால், சாத்தூரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள இருக்கன்குடியில் கோயில் கொண்டுள்ள மாரியம்மனுக்கு நந்திவாகனம் இருக்கிறது. இங்கு திருவிழாக்காலங்களில் மகா மாரியம்மன் ரிஷப வாகனம் வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பாள்.