தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தெப்பக்குளத்து மாரியம்மன் கோயில். ஆடி மாதமும், நவராத்திரியும் இங்கு மிகவும் விசேஷம். நவராத்திரி நாட்களில் இங்கே பிரமாண்டமான கொலு அமைக்கப்பட்டு ஸ்ரீதேவி மகாத்மிய பாராயணம், சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. இங்குள்ள நாகப்புற்றுக்கு மஞ்சள் பொடி தூவி வழிபட்டால் ராகு தோஷம் நீங்கும் என்கின்றனர்.