கும்பகோணத்திலிருந்து பத்துக் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் திருநரையூர் என்ற நாச்சியார் கோயில் திருத்தலத்தில் உள்ள ஆகாச மாரியம்மன் கோயிலில், அம்மனுக்கு விக்ரகம் கிடையாது. திருவிளக்கையே அம்மனாக வழிபடுகின்றனர். இக்கோயிலில் வைகாசி மாதம் பத்து நாட்கள் மட்டும் திருவுருவில் அலங்காரத்துடன் சமயபுரம் அம்மன் ஆகாய மார்க்கமாக வந்து அருள்புரிகிறாள் என்பது ஐதிகம்.