Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சேஷ வாகனத்தில் சேதுநாராயணப் ... வடக்குவாசல் செல்வி அம்மன் கோயிலில் ஆடிப்பொங்கல் விழா வடக்குவாசல் செல்வி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்களில் தீபம் ஏற்ற தடை: சிவனடியார்கள் உண்ணாவிரதம்
எழுத்தின் அளவு:
கோவில்களில் தீபம் ஏற்ற தடை: சிவனடியார்கள் உண்ணாவிரதம்

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2018
11:07

தஞ்சாவூர்: கோவில்களில் பக்தர்கள் விளக்கேற்றுவதற்கு அறநிலையத்துறை தடை விதித்துள்ளதை கைவிட வலியுறுத்தி கும்பகோணத்தில் ஜோதிமலை இறைபணி திருக்கூட்ட அமைப்பினர் நேற்று ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர். போராட்டத்துக்கு திருவடிக்குடில் சுவாமிகள் தலைமை வகித்தார். இதில் 20க்கும் மேற்பட்ட சிவனடியார்களும், பக்தர்களும் பங்கேற்றனர்.

போராட்டத்தில் ஜோதிமலை இறைபணி திருக்கூட்ட தலைவர் திருவடிக்குடில் சுவாமிகள் பேசியது: கோவில்களில் திருவிளக்கு, தீபம் ஏற்றுவது என்பது சாதாரண விஷயமல்ல. இறைவன் ஜோதி ரூபமானவன். பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகள் நிறைவேறுவதற்காக விருப்பமான கோவிலுக்கு சென்று தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். இதை ஏதோ காரணம் சொல்லி அறநிலைய துறை தடுத்து நிறுத்துவது சரியான நடவடிக்கையாக இல்லை. தமிழக அரசு மற்றும் அறநிலைய துறை மீது மக்களுக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. எனவே அரசின் இத்தகைய விளக்கேற்றும் தடை உத்தரவை திரும்ப பெற வேண்டும். 63 நாயன்மார்களில் ஒருவரின் கலிய நாயனார் மிகுந்த சிவபக்தி உடையவர். தினமும் விளக்கேற்றி வழிபட்டு வந்த நிலையில் எண்ணை வாங்க பணம் இல்லாததால் தனது கழுத்தை தானே அறுத்து ரத்தத்தில் விளக்கேற்ற முயன்றபோது சிவபெருமானே நேரில் தோன்றி தடுத்தார். எனவே இதில் பக்தனின் கொள்கை, உறுதி என்பது முக்கியமானது. அதனடிப்படையில் கலியநாயனாரின் குருபூஜை நாளில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உண்ணாவிரதம் இருக்கிறோம் இவ்வாறு கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் சனிபெயர்ச்சியை முன்னிட்டு இன்று சனிபகவான் கும்பராசியிலிருந்து மீனராசிக்கு ... மேலும்
 
temple news
சின்னமனுார்: தேனி மாவட்டம் குச்சனுார் சனீஸ்வரர் கோயில் நடந்த சனிப் பெயர்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா 56- நிம்மேலி கிராமத்தில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் ... மேலும்
 
temple news
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், பொங்கு ச னீஸ்வரர் சன்னதியில், இன்று (6ம் தேதி) சனிப்பெயர்ச்சி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் சதயவிழா, ஆ‌ஷாட நவராத்திரி விழா, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar