Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சாமுண்டீஸ்வரி கோவிலில் 108 பால்குட ... சகாய அன்னை ஆலய கொடியேற்றம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வாழ்க்கை தத்துவங்களின் உச்சம் கம்பராமாயணம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஆக
2018
03:08

சென்னை, கம்பராமாயணம், ஒவ்வொரு முறை படிக்கும் போதும், புதுயைான கருத்துக்களை வழங்கும் புதையல் போன்றது, என, நீதிபதி ராமசுப்பிரமணியன் பேசினார். சென்னை கம்பன் கழகத்தின், 44ம் ஆண்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. அதில், பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா, காங்., மூத்த தலைவர் குமரி அனந்தன், பேராசிரியர் ஜெயதேவன், வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர், ஞானபிரகாசம், சுயசரிதை எழுத்தாளர் ராணி மைந்தன் உள்ளிட்ட, 19 பேருக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகளை வழங்கி, ஐதராபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் பேசியதாவது: கம்பராமாயணத்தில், கம்பன் செய்யாத புதுமையை, சென்னை கம்பன் கழகம் செய்துள்ளது. ராமாயணத்தில், இரண்டு தலைமுறையினரைப் பற்றிய கதை உள்ளது. சென்னை கம்பன் கழகத்தில், மூன்று தலைமுறையினர் பெருமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நான், 1977ல், மாணவனாக இருந்த போது, கம்பன் கழகம் நடத்திய, கம்பனும் திருவள்ளுவனும் என்ற தலைப்பில் நடந்த பேச்சுப் போட்டியில் பங்கேற்று, முதல் பரிசாக, 250 ரூபாய் பெற்றேன். வழக்கறிஞரான பின், இதே கம்பன் கழகத்தில், பேச்சாளரானேன். தற்போது, தலைமை ஏற்கிறேன். ராமாயணத்தில் ராமன், ஒரு அவதாரம் எடுத்தான். நான் இங்கு மூன்று அவதாரங்கள் எடுத்து உள்ளேன். கடந்த, 20ம் நுாற்றாண்டில் பேசப்பட்ட, தலைமுறை உரிமைகளைப் பற்றி கம்பன், வருணன் கதை வழியாக உணர்த்துகிறான். இவன், பூமியில் உள்ள வளங்களை, ஒரே தலைமுறையில் பறிக்கும் பாவத்துக்கு உரியவன் எனக் கூறுகிறான். பல்லுயிர் பரவல் பற்றி, நலன் கதையில், ஒரே அம்பில், இந்த கடலை நீ, கட்டியாக்கி விடுவாய்; ஆனால், அதில் உள்ள பல உயிர்கள், அத்துடன் மடியும். அதனால் கிடைக்கும் வெற்றியில் என்ன பயன் என, கேட்கிறான். வால்மீகி ராமாயணத்தில் இல்லாத பகுதியாக, கருடன் துதி என்னும் பகுதியை, கம்பன் படைத்து, அதில், மனித வாழ்வின் தத்துவங்களை உச்சமாக்குகிறான்.

கல்வி சிறந்த தமிழ்நாடு, இது கம்பன் பிறந்த தமிழ்நாடு; யாமரிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவனைப் போல் யாங்கனுமே கண்டதில்லை என, பல இடங்களில், கம்பனை உச்சத்தில் வைக்கிறான், பாரதி. அதற்கு காரணம், ஒவ்வொரு முறை படிக்கும் போதும், கம்பராமாயணம் புதிய புதிய கருத்துக்களை உணர்த்துவது தான். இவ்வாறு அவர் பேசினார். கம்பராமாயணத்தில் உணர்ச்சி மேலாண்மை என்ற தலைப்பில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி இறையன்பு பேசினார். தொடர்ந்து, திருப்பூர் கிருஷ்ணன் எழுதிய, உடன் பிறந்த தம்பியரும்; உபன் பிறவாத் தம்பியரும் என்ற நுால் மற்றும் வழி வழி வள்ளுவம், மாக்கதையில் மனக்காயங்கள் எனும், இரண்டு குறுந்தகடுகள் வெளியிடப்பட்டன. நிகழ்ச்சியில், சென்னை கம்பன் கழக தலைவர், ஆர்.எம்.வீரப்பன், செயலர் இலக்கியவீதி இனியவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குன்றத்துார்; சோமங்கலத்தில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவிலில், இன்று கருட சேவை உற்சவம் விமரிசையாக ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்காம் ... மேலும்
 
temple news
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருபுவனை; சன்னியாசிக்குப்பம் சப்த மாதா கோவிலில் வாராகி அம்மன் ஆஷாட நவராத்திரி விழாவின் 7வது நாளான ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar