Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விநாயகர் சிலைகள் அமைக்க அரசு 24 ... திருப்பரங்குன்றம் சிவனுக்கு சிறப்பு பூஜை திருப்பரங்குன்றம் சிவனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமூர்த்திமலை கோவிலில் மழை:காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
திருமூர்த்திமலை கோவிலில் மழை:காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

12 ஆக
2018
12:08

உடுமலை;திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், மழையிலும் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில், சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர்.  இக்கோவிலில், ஆடி அமாவாசை, தை அமாவாசை, ஆடிப்பெருக்கு, சிவராத்திரி ஆகிய தினங்கள் விசேஷமானதாகும். நேற்றுமுன்தினம் முதலே, கடந்த ஆண்டை விட, இந்தாண்டு நுாற்றுக்கணக்கான மாட்டு வண்டிகளில் விவசாயிகளும்,இரவு முழுதும் பக்தர்களும்  கோவிலுக்கு வந்தனர். நேற்று, அதிகாலை, 5:00 மணிக்கு, நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. முன்னோர்களுக்கு, பாலாற்றின் கரையில் ஏராளமானவர்கள் திதி கொடுத்து வழிபட்டனர்.

இதற்காக, கோவில் நிர்வாகம் சார்பில், தனி ெஷட் உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நேற்று காலை முதலே, திருமூர்த்தி மலைப்பகுதிகளில், மழை பெய்து வந்த நிலையிலும், நீண்ட வரிசையில், பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமியை  வழிபட்டனர். சாரல் மழையுடன், பஞ்சலிங்கம் அருவியில், பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் குளித்து மகிழ்ந்தனர். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாட்டு வண்டிகளுக்கு, திருமூர்த்தி அணை கரையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இரு சக்கர  வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களுக்கு என தனித்தனியாக இடம் ஒதுக்கப்பட்டு, நெரிசல் குறைக்கப்பட்டது. வாகனங்கள் அனுமதிக்காததால், அணையிலிருந்து கோவில் வரை, ஒரு கி.மீ.,துாரம் மக்கள் கூட்டம் இருந்தது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு  பஸ்கள் இயக்கப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar