பழநி, ஞாயிறு விடுமுறை தினத்தில், பழநி முருகன் கோயிலுக்கு வந்த பக்தர்கள் ரோப்கார் நிறுத்தம் காரணமாக, வின்ச் ஸ்டேஷனில் இரண்டு மணிநேரம் காத்திருந்தனர். பழநி முருகன் மலைக்கோயிலுக்கு, வழக்கமாக சனி, ஞாயிறு தினங்களில் வெளியூர் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் அதிகமாக வருகின்றனர். நேற்று ஞாயிறு அன்று அதிகாலை முதல் குவிந்த பக்தர்கள், ரோப்கார் நிறுத்தம் காரணமாக, வின்ச் மூலம் மலைக்கு செல்வதற்கு இரண்டு மணிநேரத்திற்கு மேலாக வரிசையில் காத்திருந்தனர். மலைக்கோயில் பொதுதரிசனம் வழியில் ஒருமணிநேரம் வரை காத்திருந்து முருகரை தரிசனம் செய்தனர். பக்தர்கள் பால்குடங்கள், காவடிகள் எடுத்து கிரிவலம்வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு தங்கரதப்புறப்பாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.