பதிவு செய்த நாள்
24
ஆக
2018
12:08
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம், பெரிய மாரியம்மன் கோவிலில் இன்று கும்பாபி?ஷக விழா நடக்கவுள்ளது. மல்லசமுத்திரத்தில், பெரிய மாரியம்மன் கோவில் புனரமைக்கப்பட்டுள்ளது. இதற்கான கும்பாபி ?ஷக விழா, கடந்த, 21ல் கிராம சாந்தியுடன் துவங்கியது. மறுநாள் காலை, 6:00 முதல், இரவு, 8:00 மணி வரை, கணபதி ஹோமம், காவிரிக்கு தீர்த்தக்குடம் எடுத்து வர புறப்படுதல், தெய்வ அனுமதி பெறுதல், விக்னேஸ்வர பூஜை, முதற்கால யாக பூஜை, திருப்பள்ளிஎழுச்சி, இரண்டாம் கால யாகபூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை, 7:00 மணிக்கு, சுவாமி சிலைகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடந்தது. இன்று காலை, 6:30 மணிக்கு சிலைகளுக்கு கங்கணம் கட்டுதல், நான்காம் கால யாக வேள்வியைத் தொடர்ந்து, 9:30 மணிக்கு விநாயகர், பெரியமாரியம்மன் சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும்.