அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் ஒரு பிரச்னை தீர வழிதெரியாமல் குழம்பினார். அவரது நண்பரிடம் பிரச்னையை சொல்லியும் தீர்வு கிடைக்கவில்லை. லிங்கனிடம் “நண்பரே கலங்க வேண்டாம். ஆண்டவர் உம்பக்கம் இருப்பார்” என்றார் நண்பர். “ஆண்டவர் என் பக்கம் இருக்க வேண்டுமென்பது என்பதல்ல; நான் அவர் பக்கம் இருக்க வேண்டும். அதுவே என் விருப்பம்” என்றார் லிங்கன். குழப்பத்திலும் அவர் மனதில் இருந்த தெளிவைப் பார்த்தீர்களா! எப்போதும் கடவுள் நம் பக்கம் வர வேண்டும் என்பதை விட நாம் அவர் பக்கம் இருப்பதே மேலானது.