பதிவு செய்த நாள்
29
ஆக
2018
12:08
தர்மபுரி: தர்மபுரி, விருப்பாட்சிபுரத்தில் உள்ள ராகவேந்திரா சுவாமி கோவிலில், 347வது ஆண்டு ஆராதனை விழாவை முன்னிட்டு கடந்த, 25ல், கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. 26ல், காலை சத்ய நாராயணா பூஜை, மாலை சீனிவாச கல்யாண வைபவம் நடந்தது. நேற்று முன்தினம் காலை, 6:00 மணிக்கு ராகவேந்திரருக்கு பூர்வ ஆராதனை, லட்சார்ச்சனை நடந்தது. முக்கிய நாளான நேற்று காலை, திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம் வந்தனர். இன்று காலை, 8:00 மணிக்கு லட்சார்ச்சனை, நாளை காலை, 8:00 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் ஆராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை, விழா குழுத் தலைவர் வெங்கடேசன், செயலாளர் வெங்கட்ராமன், பொருளாளர் முரளிதரன் செய்கின்றனர்.