Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரையில் விநாயகர் சதுர்த்தி ... தேனியில்  விநாயகர் ஊர்வலத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு தேனியில் விநாயகர் ஊர்வலத்திற்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமநாதபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்:271 இடத்தில் சிலை அமைப்பு
எழுத்தின் அளவு:
ராமநாதபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்:271 இடத்தில் சிலை அமைப்பு

பதிவு செய்த நாள்

14 செப்
2018
12:09

ராமநாதபுரம்;ராமநாதபுரம் மாவட்டத்தில் 271 இடங்களில் விநாயகர் சிலை அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப் பட்டன. ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, ராமேஸ்வரம், கீழக்கரை, மண்டபம், திருவாடானை, முதுகுளத்தூர், கமுதி உள்ளிட்ட பகுதிகளில் 271 இடங்களில் விநாயகர்கள் சிலை அமைக்கப்பட்டன.

விநாயகருக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இந்த சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ராமேஸ்வரம், தங்கச்சி மடம், மண்டபம், பரமக்குடி பகுதியில் இன்று(செப்.,14) மாலை சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படுகின்றன.

நாளை (செப்.,15) ராமநாதபுரம், தேவிபட்டினம், நரிப்பையூர், சாயல்குடி பகுதிகளில் வைக்கப் பட்ட விநாயகர்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படுகின்றன. இதற்கான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பரமக்குடி: பரமக்குடியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி அனைத்து கோயில்கள்மற்றும் வீடுகளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பரமக்குடியில் இந்து முன்னணி சார்பில் 40 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதன் படி 2 அடி முதல் 15 அடிஉயரம் வரை கொண்ட சிலைகளுக்கு பூஜைகள் நடத்தப் பட்டன. திருவிளக்கு வழிபாடு, உறியடி, அன்னதானம்நடந்தது.

இன்று மாலை 4:00 மணிக்கு நகரின் முக்கிய வீதிகளில்ஊர்வலம் நடத்தப்பட்டு பெருமாள் கோயில் முன்பு வைகை ஆற்றில் சிலைகள் கரைக்கப்படும். ஈஸ்வரன் கோயிலில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து,மாலை 6:00 மணிக்கு மூஞ்சூறு வாகனத்தில் வீதிவலம் வந்தார்.

தரைப்பாலம்முருகன் கோயிலில் அபிஷேகத்திற்குப் பின், சர்வ அலங்காரத்துடன் அருள் பாலித்தார். சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் தும்பிக்கை ஆழ்வாருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. கல்பட்டறை சித்திவிநாயகர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

எமனேஸ்வரமுடையவர், நயினார்கோவில் நாகநாதசுவாமி உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் பூஜைகள் நடந்தன.

* முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் காந்திசிலை அருகே விநாயகர் கோவிலில் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. கொழுக்கட்டைகள் படைத்து வழிபாடு நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.

* திருவாடானை: திருவாடானை பஸ்ஸ்டாண்டு ஆதிரெத்தினகணபதி,பாரதிநகர் லட்சுமி விநாயகர், தொண்டி இரட்டைபிள்ளையார்சோலியக்குடி செல்வவிநாயகர் கோயில்களில்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டுபால்குடம் எடுத்தல், பூக்குழி இறங்குதல் போன்றவை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.அன்னதானம், கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழகர்கோவில்: மதுரை வண்டியூர் தேனுார் மண்டபத்தில் நேற்று மண்டூக முனிவருக்கு கருட வாகனத்தில் சாப ... மேலும்
 
temple news
xதஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனின் அறுபடை ... மேலும்
 
temple news
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீர அழகர் கோவில் சித்திரை திருவிழாவில் நிலாச்சோறு ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை அரங்கநாதர் கோவிலில் சித்ரா பவுர்ணமியை ஒட்டி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தருமை ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar