Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வெள்ளங்குளி கோயிலில் 9ம் தேதி ... ப.ரெட்டியபட்டி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அய்யன்குளக்கரை மகா கணபதி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 பிப்
2012
11:02

முக்கூடல்:பாப்பாக்குடி புதுக்கிராமம் அய்யன்குளக்கரை மகா கணபதி கோயில் மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது.200 ஆண்டுகள் பழமையான பாப்பாக்குடி புதுக்கிராமம் அய்யன்குளக்கரை மகா கணபதி கோயில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 31ம் தேதி கும்ப பூஜை, கணபதி ஹோமம், கஜ பூஜை, கோ பூஜை, நவக்கிரஹ பூஜை, சுதர்சன பூஜை, வாஸ்துசாந்தி, சிறப்பு தீபாராதனை ஆகியன நடந்தது. அன்று மாலை நந்தன்தட்டை தாமிரபரணி ஆற்றிலிருந்து கும்பங்களில் புனிதநீர் சேகரித்து கஜ வாகனத்தில் வலம் வந்து, 1ம் கால யாக வேள்வி நடந்தது.நேற்று முன்தினம் 2ம் கால யாகசாலை பூஜை, யாக ஹோமம், சிவசூர்ய, தோரண பூஜையும், மாலையில் 3ம் யாக பூஜையும் நடந்தது. கும்பாபிஷேக நாளான நேற்று காலை 4ம் கால யாக சாலை பூஜை, சிவசூர்ய பூஜை, வேதிகா பூஜை, அர்ச்சனை, 9 மணிக்கு யாத்ராதானம், கும்பம் எழுந்தருளுதல், விமான கும்பாபிஷேகம், பிரதான மூர்த்தி, பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம், மஹா அபிஷேக கும்ப பூஜை ஆகியன நடந்தது. மாலையில் பிரசன்ன பூஜையும், சப்பரத்தில் கணபதி உற்சவர் வீதியுலாவும் நடந்தது.கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. பாப்பாக்குடி சப்-இன்ஸ்பெக்டர் ரோஜா தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சொக்கலால் மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் கோமதிசங்கர் தலைமையில் மாணவர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர். கும்பாபிஷேகத்தை வடக்கு அரியநாயகிபுரம் முருகானந்தசிவம் நடத்தினார். கும்பாபிஷேகம் மற்றும் திருப்பணிகளை பரம்பரை அறங்காவலர் லட்சுமி அம்பாள், சஞ்சீவிதர்மராஜய்யர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
 கடலுார்: இலங்கையை சேர்ந்த தமிழர்கள், 96 பேர் இந்தியாவில் முழுவதும் உள்ள ஆன்மீக வழிபாட்டுத் தலங்களை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், சோழர் கால விஷ்ணு கற்சிலையை, வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar