Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நாமக்கல் நைனாமலை வரதராஜ பெருமாள் ... சேலம் திருப்பதி பிரமோத்ஸவம் 50 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாமக்கல்லில் மோகனூர் காவிரியாற்றில் கரைக்க விநாயகர் சிலைகள் ஊர்வலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 செப்
2018
02:09

நாமக்கல்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நாமக்கல்லில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள், நேற்று (செப்.,16ல்) ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, மோகனூர் காவிரியாற்றில் கரைக்கப்பட்டது.

நாமக்கல்லில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் குளக்கரை திடல், தட்டாரத்தெரு உள்ளிட்ட, 15 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப் பட்டது. இந்த சிலைகள் நேற்று (செப்.,16ல்) நகரின் முக்கிய வீதிகள் வழியாக, நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோவில் அருகில் கொண்டு வரப்பட்டன. பின்னர் அங்கிருந்து ஊர்வலத்தை, நாமக்கல் குற்றவியல் வக்கீல்கள் சங்கத் தலைவர் அய்யாவு கொடியசைத்து தொடங்கி வைத்தார். தட்டாரத் தெரு, சேந்தமங்கலம் சாலை, மேட்டுத்தெரு, பஸ் ஸ்டாண்ட், பரமத்தி சாலை, கோட்டை சாலை, பிரதான சாலை, மோகனூர் சாலை வழியாக மேள தாளத்துடன் பல்வேறு வாகனங்களில், விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்றனர். இறுதியாக, மோகனூர் காவிரியாற்றில் சிறப்பு பூஜைகள் செய்து, அனைத்து சிலைகளும் கரைக்கப்பட்டன. இந்து முன்னணி ப.வேலூர் கோட்ட அமைப்பாளர் ராஜேஸ் சிறப்பாளராக கலந்து கொண்டார். மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட துணைத் தலைவர் இளமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பேசினர். டி.எஸ்.பி., ராஜேந்திரன் தலைமையில், 225க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

* பள்ளிபாளையம் பஸ்நிறுத்தம், பாலம் சாலை, காவேரி, ஆவராங்காடு, வசந்தநகர் மற்றும் பல இடங்களில் கடந்த, 13 ல், விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு, சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. நேற்று (செப்., 16ல்) மாலை, 6:00 மணிக்கு அனைத்து சிலைகளும் ஊர்வலமாக, பள்ளிபாளையம் பகுதி முக்கிய சாலைகள் வழியாக கொண்டு சென்று ஆற்றில் கரைக்கப் பட்டது. இந்து முன்னணி, வி.எச்.பி., மற்றும் பொதுமக்கள் சார்பில் என, மொத்தம், 90 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது என, போலீசார் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar