Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் தினமும் 1 லட்சம் ... மேலுாரில் பாரம்பரிய பொங்கல் விழா மேலுாரில் பாரம்பரிய பொங்கல் விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மஹாத்மா காந்தி கோவிலுக்கு அதிகளவில் வரும் பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
மஹாத்மா காந்தி கோவிலுக்கு அதிகளவில் வரும் பக்தர்கள்!

பதிவு செய்த நாள்

03 அக்
2018
10:10

ஐதராபாத் : தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மஹாத்மா காந்தி கோவிலில் வேண்டுவது, உடனடியாக நிறைவேறுவதாக, அங்குள்ள மக்கள் நம்புவதால், தினமும் ஏராளமானோர் அங்கு வருகின்றனர். தெலுங்கானா மாநிலத்தின், நலகொண்டா மாவட்டத்தில், கடந்த ஆண்டு, மஹாத்மா காந்தியின், 149வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலையுடன் கூடிய கோவில் கட்டப்பட்டது. இந்த கோவிலில் வேண்டுவது, உடனடியாக நிறைவேறுவதால், ஏராளமான பக்தர்கள், தினமும் கோவிலுக்கு வந்தபடி உள்ளனர்.

இது குறித்து, கோவில் பூசாரி, குரெல்லா நாராயணன் சாரி கூறியதாவது: இந்த கோவிலில் உள்ள மஹாத்மா காந்தி சிலைக்கு, மாபெரும் சக்தி உள்ளது. சமீபத்தில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர், இந்த கோவிலுக்கு வந்தார். அப்போது என்னிடம், பல ஆண்டுகளாக, என் மகளுக்கு திருமணம் நடக்காமல் இருந்தது. இங்கு வந்து, மஹாத்மா காந்தியிடம் வழிபட்ட பின், என் மகளுக்கு வரன் கிடைத்தது என்றார். இவ்வாறு பல பக்தர்களின் வேண்டுதல்களை, மஹாத்மா காந்தி நிறைவேற்றி உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

காந்தியின், 150வது பிறந்த நாளை ஒட்டி, ஆந்திர மாநிலம், விஜயவாடாவில், அவருக்கு இரண்டாவது கோவில் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோவிலை, ஆந்திர மாநில முதல்வர், சந்திரபாபு நாயுடு, நேற்று திறந்து வைத்தார். இந்த கோவிலை, சுதந்திர போராட்ட தியாகிகளான, ராம்பில்லா சையத் அப்பாலாசாமி, கோல்லா நாராயணா ராவ் ஆகியோரின் பேரக் குழந்தைகள் கட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar