பதிவு செய்த நாள்
08
அக்
2018
12:10
செஞ்சி: செஞ்சி பகுதி சிவன் கோவில்களில் நேற்று (அக்.,7ல்) சனி மகா பிரதோஷ வழிபாடு நடந்தது.
செஞ்சி காமாட்சியம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஏகாம்பரேஸ்வரர், காமாட்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். நந்தீஸ்வரருக்கு பால் அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. பெண்கள் அகல் விளக்கேற்றி நந்தீஸ்வரை வழிபட்டனர்.
பீரங்கிமேடு அபிதகுஜலாம்பாள் சமேத அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அருணாச் சலேஸ்வரர், அபிதகுஜலாம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். நந்திஸ்வர ருக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை 6:00 மணிக்கு சாமி கோவில் உலாவும் நடந்தது. முக்குணம் முக்குன்றநாத உடையார் கோவிலில் முக்குன்றநாதர், நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். மாலை 6:00 மணிக்கு சாமி கோவில் உலா நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. பெருவளூர் கோகிலாம்பாள் சமேத கோட்டீஸ்வரர் கோவிலில் கோட்டீஸ்வரர், கோகிலாம்பாள் மற்றும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். பெண்கள் அகல் விளக்கேற்றி வழிபட்டனர்.
செஞ்சி:செத்தவரை--நல்லாண்பிள்ளை பெற்றாள் மோன சித்தர் குருபீட ஆஸ்ரமத்தில் உள்ள மீனாட்சியம்மன் உடனுறை சொக்கநாதர் கோவிலில் நேற்று காலை சொக்கநாதர், மீனாட்சி யம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. மாலை 4:00 மணிக்கு சிவ ஜோதி மோனசித்தர் தலைமையில் நந்தீஸ்வரருக்கு விசேஷ பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், செய்தனர். தொடர்ந்து நந்தீஸ்வரர், சொக்கநாதர், மீனாட்சியம் மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. மீனாட்சியம்மன் சமேத சொக்கநாதர் கோவில் உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர், நீலமங்கலம், கமலா நேரு தெரு ஏகாம் பரேஸ்வரர், ஏமப்பேர் விஸ்வநாதர், சோமண்டார்குடி சோமநாதீஸ்வரர், முடியனூர், தென் கீரனூர் அருணாசலேஸ்வரர், தண்டலை சுயம்பு நாதேஸ்வரர், கணங்கூர் ராமநாதீஸ்வரர், வரஞ்சரம் பசுபதீஸ்வரர், சடையம்பட்டு கேதாரீஸ்வரர், வடக்கநந்தல் உமாமகேஸ்வரர், ஆலத்தூர் திருவாலீஸ்வரர் கோவில்களில் நடந்த சனி பிரதோஷ சிறப்பு பூஜையில் ஏராள மான பக்தர்கள் வழிபட்டனர்.சின்னசேலம் : தென்பொன்பரப்பி சொர்ணாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் சனிப்பிரதோஷ வழிபாடு நடத்தப்பட்டது. இதேபோல் சின்ன சேலம் கங்காதீஸ்வரர், ராயர்பாளையம் குமாரதேவர் மடம் பழமலைநாதர், கூகையூர் பெரியநாயகி உடனுறை சொர்ணபுரீஸ்வரர், அசலகுசலாம்பிகை சமேத பஞ்சாட்சரநாதர் கோவில்களிலும் சனிப்பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது.