உடுமலை நவராத்திரி விழா இன்று (அக்., 10ல்) துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10அக் 2018 11:10
உடுமலை:உடுமலை, பிரசன்ன விநாயகர் கோவிலில் நவராத்திரி விழா இன்று (அக்., 10ல்) துவங்குகிறது.
உடுமலையில், கோவில்களில் நவராத்திரி விழா இன்று (அக்.,10ல்) முதல் ஒன்பது நாட்களுக்கு நடக்கிறது. அதன்படி பிரசன்ன விநாயகர் கோவிலில் காலை, 7:00 மணிக்கு விசாலாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிேஷ ஆராதனையுடன் விழா துவங்குகிறது.தொடர்ந்து, 9:00 மணிக்கு கொடியேற்றமும், மாலை, 6:00 மணிக்கு, வர்ணமாலிகா இசைப்பள்ளி ஆசிரியர் கண்ணன் மற்றும் மாணவர்களின் இசை நிகழ்ச்சியும் நடக்கிறது.