Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்புடைமருதூர் கோயில் தேரோட்டம் ... ரவணசமுத்திரத்தில் தேர் திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆழ்வார்குறிச்சியில் இன்று தெப்பத் திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 பிப்
2012
03:02

ஆழ்வார்குறிச்சி : ஆழ்வார்குறிச்சியில் சிவசைலநாதர் - பரமகல்யாணி அம்பாள் தெப்பத் திருவிழா இன்று (7ம் தேதி) நடக்கிறது. சிவசைலத்தில் மேற்கு நோக்கி அமைந்துள்ள புகழ்பெற்ற சிவஸ்தலம் சிவசைலநாதர் - பரமகல்யாணி அம்பாள் கோயிலாகும். சுவாமிக்கும், அம்பாளுக்கும் ஆழ்வார்குறிச்சி நகர வியாபாரிகள் சங்கத்தினர் பொதுமக்களுடன் இணைந்து ஆண்டுதோறும் தெப்பத் திருவிழாவை நடத்துவர். இந்தாண்டு தெப்பத் திருவிழா கடந்த 29ம் தேதி கால்நாட்டுதல் வைபவத்துடன் துவங்கியது. நேற்று இரவு சிவசைலத்தில் இருந்து சுவாமி, அம்பாள் வெள்ளிச் சப்பரத்தில் ஆழ்வார்குறிச்சி தெப்பத் திருக்குள விநாயகர் கோயிலுக்கு எழுந்தருளினார். சுவாமி அம்பாளுக்கு ஊர் முகப்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று (7ம் தேதி) விளா பூஜை அபிஷேகமும், அதனை தொடர்ந்து சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. பின்னர் சுவாமி, அம்பாள் கேடயத்தில் விநாயகர் கோயிலிலிருந்து தர்மபுர ஆதீன மடத்திற்கு எழுந்தருளல் நடக்கிறது. பின்னர் உச்சிகால அபிஷேகமும், விசேஷ அலங்காரத்துடன் கூடிய பூஜையும் நடக்கிறது. மாலை சாயரட்சை தீபாராதனை, இரவு 8 மணியளவில் சுவாமி, அம்பாள் தர்மபுரம் ஆதீன மடத்தில் இருந்து கேடயத்தில் தெப்பத்திற்கு எழுந்தருளுகின்றனர். சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி, அம்பாள் 11 சுற்று வலம் வருதலும், பின்னர் சிறப்பு வாணவேடிக்கையுடன் திருக்குளம் வீதி வரும்போது பெரியதளவாய் மாடசாமிக்கு காட்சியளித்தல் வைபவமும் நடக்கிறது. விழாவில் கட்டியம், வேதபாராயணம், தேவார பன்னிசை ஆகியன நடக்கிறது.
நாளை (8ம் தேதி) சுவாமி, அம்பாள் அதிகாலையில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி ஆழ்வார்குறிச்சி நகர வீதியுலா நடக்கிறது. பின்னர் ரிஷப வாகனத்தில் இருந்து சுவாமி இறங்கும்போது இரண்டு சிவாச்சாரியார்கள் வைதீக கோலத்துடன் ரெட்டை சோடசோபசார தீபாராதனை நடக்கிறது. காலை 9 மணிக்கு மேல் ருத்ர ஹோமம், ருத்ர ஏகாதசி, விசேஷ அபிஷேகம், சிறப்பு தீபாராதனையும், இரவு 8 மணிக்கு மேல் தர்மபுர ஆதீன மடத்திலிருந்து சுவாமி, அம்பாள் வெள்ளிச் சப்பரத்தில் சிவசைலம் எழுந்தருளலும், கோயில் சேர்ந்த பின்னர் அபிஷேக தீபாராதனையும் நடக்கிறது. தெப்பத் திருவிழா சிறப்பு நிகழ்ச்சிகளாக நேற்று இரவு 9 மணியளவில் திருவனந்தபுரம் சதீஷ்குமாரின் செண்டை மேள கச்சேரி நடந்தது. தெப்பத் திருநாளான இன்று மாலை 6 மணிக்கு முக்கூடல் ஓ.கே.சி.என். வெங்கடேஷ் குழுவினரின் கிளாரினெட் கச்சேரி நடக்கிறது. ஏற்பாடுகளை தெப்ப உற்சவ கமிட்டி நிரந்தர தலைவர் அ.கிருஷ்ணமூர்த்தி, ஆய்வாளர் சுப்புலெட்சுமி, செயல் அலுவலர் முருகன் மேற்பார்வையில் வியாபாரிகள் சங்கத்தினர், தெப்ப உற்சவ கமிட்டியினர், கட்டளைதாரர்கள், பொதுமக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கரிங்கரைப்புள்ளி காடாங்கோடு பகவதி அம்மன் கோவில் பிரதிஷ்டை தின உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; அஷ்டமி பூப்பிரதட்சனம் யொட்டி ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், உலக சாதனை முயற்சியாக, 900க்கும் மேற்பட்ட நாட்டிய ... மேலும்
 
temple news
கூடலுார்; கூடலுார் கூடலழகிய பெருமாள் கோயிலில் கூடாரவல்லி திருவிழா வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலுக்கு வரும் பாதயாத்திரை சாரல் மலையில் சாலைகளில் பாதுகாப்புக்கு இன்றி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar