கோவை: ஈஷா யோகா மையத்தில் நவராத்திரி திருவிழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. விழாவில் சந்தன அலங்காரத்தில் லிங்க பைரவி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திருவிழாவின் 4-ம் நாளான (அக். 13ல்) குமாரி. ரேஷிகாவின் பாரதநாட்ய நிகழ்ச்சி நடைப்பெற்றது. விழாவின் 5-ம் நாளான நேற்று (அக். 14ல்) கலை தாமரை குழுவின் காவடி மற்றும் கரகாட்ட நிகழ்ச்சி நடைப்பெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.