கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) உற்சாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19அக் 2018 03:10
மற்றவர் கருத்து மதிப்பளிக்கும் கன்னி ராசி அன்பர்களே!
மாதம் முழுவதும் சுக்கிரன், ராகு நன்மை தருவர். செவ்வாய் அக்.27ல் சாதகமான இடத்துக்கு மாறுகிறார். இதனால் பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர் தொல்லை மறையும். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணம் சேரும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். குடும்பத்தில் ராகுவால் பொன், பொருள் சேரும். சகோதர, சகோதரிகள் உறுதுணையாக செயல்படுவர். குருவின் 7-ம் இடத்துப் பார்வையால் பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் குறைவின்றி பூர்த்தியாகும். ஆடம்பர வசதிகள் பெருகும். அக்.18,19, நவ.14,15ல் பெண்களால் முன்னேற்றமான சம்பவம் நடக்கும். விருந்து விழா என சென்று வருவீர்கள் அக்.31, நவ.1ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் நவ.11,12ல் அவர்கள் வகையில் கருத்து வேறுபாடு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.
பணியாளர்கள் அக்.27க்கு பிறகு சிறப்பான முன்னேற்றத்தைக் காணலாம். அதிகாரிகள் அனுசரணையுடன் நடந்து கொள்வர். எதிர்பார்த்த கோரிக்கைகள் நிறைவேறும். அரசு ஊழியர்களுக்கு சுக்கிரனால் புதிய பதவி தேடி வரும். சக ஊழியர்கள் மிக ஆதரவுடன் இருப்பர். அக்.29,30ல் எதிர்பார்ப்பு நிறைவேறும். பணியிடத்தில் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். இடமாற்ற பீதி மறையும். அக்.24 முதல் நவ.13 வரை அரசு ஊழியர்கள் வேலையில் கவனமுடன் இருக்கவும். வேலைப்பளுவும் இருக்கும். பிரச்னை குறுக்கிட்டாலும் குருவின் 9-ம் இடத்துப் பார்வையால் அதற்கான தீர்வும் கிடைக்கும்.
தொழில், வியாபாரத்தில் சுக்கிரனால் பொருளாதார வளம் சிறக்கும். அரசு வகையில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். விரிவாக்கப்பணிக்காக விண்ணப்பித்த வங்கி கடனுதவி கிடைக்கும். அனுபவசாலிகளின் ஆலோசனை வளர்ச்சிக்கு துணைநிற்கும். தொழில்ரீதியான வெளியூர் பயணம் சிறப்பாக அமைவதோடு ஆதாயத்துடன் திரும்புவீர்கள். அக்.20,21,நவ.16 ல் எதிர்பாராத வகையில் திடீர் வருமானம் கிடைக்கும். நவ.2,3,6,7,8ல் சந்திரனால் சிறுதடைகள் குறுக்கிடலாம். அக்.24 முதல் நவ.13 வரை அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.
கலைஞர்களுக்கு சுக்கிர பலத்தால் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வருமானம் எதிர்பார்த்ததைவிட அதிகரிக்கும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்கும். சக கலைஞர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். அக்.27க்கு பிறகு எதிர்பார்த்த நன்மையை அடைய வாய்ப்புண்டு. தொண்டர்களுக்காக பணம் செலவழிக்க நேரிடலாம். அக்.18,19, நவ.13,14,15ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். சிரத்தை எடுத்து படித்தால் சிறப்பு நிலை அடையலாம். குருவின் பார்வையால் பின்தங்கிய நிலை இருக்காது. ஆசிரியர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு துணைநிற்கும். விவசாயிகள் நெல், கேழ்வரகு, சோளம் போன்ற தானியங்களின் மூலம் சிறப்பான மகசூல் பெறுவர். கால்நடை வகையில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்காது. அக்.27க்கு பிறகு செவ்வாய் சாதகமான நிலையில் இருப்பதால் புதிய சொத்து வாங்கலாம் வழக்கு, விவகாரங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். பக்கத்து நிலத்தின் வகையில் இருந்த பிரச்னை மறையும்.
பெண்கள் குடும்பத்தினரிடம் பொறுமையாகவும், விட்டுகொடுத்து போகவும். குருவின் பார்வை சாதகமாக இருப்பதால் பிற்போக்கான நிலை ஏற்படாது. திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அக்.22,23, நவ.9,10 ஆகியவை சிறப்பான நாட்களாக இருக்கும். புத்தாடை, அணிகலன்கள் கிடைக்கப் பெறலாம். விருந்து விழா என சென்று வருவீர்கள். சுய தொழில் செய்து வரும் பெண்கள் வங்கி கடன் மூலம் விரிவாக்கப்பணியில் ஈடுபடுவர். ஆதாயமும் உயரும். சூரியனால் உடல்நலக்குறைவு ஏற்படலாம்.