பதிவு செய்த நாள்
24
அக்
2018
11:10
சென்னை: பெசன்ட் நகரில் உள்ள ரத்னகிரீஸ்வரர் கோவிலில், இன்று மாலை, அன்னாபிஷேக விழா நடைபெற உள்ளது.சென்னை, பெசன்ட் நகர், 6வது குறுக்குத் தெருவில், பக்த மண்டலிக்கு சொந்தமான, ரத்னகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு,பக்தர்கள் காணிக்கையாக அளித்த காய், பழங்கள் உள்ளிட்டவை இறைவனுக்கு அலங்கரிக்கப்படும்.மேலும், பக்தர்கள் காணிக்கையாக அளித்த, 100 கிலோ அரிசியால், ஒவ்வொரு ஆண்டும்,ஐப்பசி மாத பவுர்ணமி நாளில், மாலை, 5:30 மணி முதல், இரவு, 10:00 மணி வரை, இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படும்.பின், அந்த அன்னத்துடன் சாம்பார், தயிர் கலந்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். அன்னாபிஷேகத்தை பிரசாதமாக உண்டால், வாழ்நாளில் அன்ன சமர்த்தி, குழந்தை பாக்கியம், செல்வங்கள் பெருகும் என்பதும் நம்பிக்கை.இந்நிலையில், இந்தாண்டிற்கான அன்னாபிஷேக விழா, இன்று மாலை, 5:30 மணிக்கு நடக்கிறது.அன்னாபிஷேகம் பற்றிய மேலும் தகவலுக்கு, 044 - 2491 0405 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.